Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை காலி செய்ய முயன்ற போது தாயும், மகளும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஜுலை 03, 2019 11:05

கும்பகோணம்: கும்பகோணத்தில் சர்ச் ரோட்டினை சேர்ந்தவர் சர்பூதீன் மனைவி பாத்திமாமுத்து(55).  இவர் தனக்கு சொந்தமான, சர்ச்ரோட்டிலுள்ள இடத்தில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பாத்திமாமுத்துவின் வீட்டில் குடியிருந்தத, தேவராஜன் மற்றும் இவரது மகன்களான ஸ்டாலின்ஜோபாஸ், சிம்சன்சகாயம், வில்லியம்சார்லஸ்  ஆகியோர், பாத்திமாமுத்து வின் இடத்தை தனக்கு தான் சொந்தமானது என வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை உரிமையியில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் வந்தது. இதில் சர்ச்ரோட்டிலுள்ள இடம் தேவராஜனின் மகன்களுக்கு சொந்தானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை, நீதிமன்ற ஊழியர்கள்,வருவாய் ஊழியர்கள், போலீசார், பாத்திமாமுத்துவின் இடத்தை கையகப்படுத்த வந்தனர். ஆனால் பாத்திமாமுத்து, இந்த இடம் எங்களது மூதாதையர்களின் இடம் என்னிடம், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை , பாத்திமாமுத்து, இவரது மகளும், தன் மேல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனையறிந்த அப்பகுதியினரும், வழக்கறிஞர்களும் மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாத்திமாமுத்துவை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைப்புச்செய்திகள்